tamilnadu

img

காஷ்மீர் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

காஷ்மீர், செப்.28- காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் பாது காப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப் பட்டனர். காஷ்மீரின் கந்தர்பாலில் வீடு ஒன் றில் தீவிரவாதிகள் புகுந்து அப்பாவி களை பிணைக் கைதிகளாக பிடித்து வைத்துள்ளதாக பாதுகாப்புப்படை யினருக்கு தகவல் கிடைத்தது. அங்கு பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கர வாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இதில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். பிணைக் கைதிகளாக பிடிக்கப்பட்டிருந்த மக்கள் விடுவிக்கப் பட்டனர். பயங்கரவாதிகளிடம் இருந்து ஏராளமான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன.

;